சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தனி நபர் மட்டுமின்றி, ஒட்டுமொத்த குடும்பமும், சமூகமும் பாதிக்கப்படுகிறது என தமிழக அரசு வாதம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பாக வழக்கில் உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் வாதத்தை முன்வைத்துள்ளது. விளையாடுபவர்களின் விவரங்களை கேட்பதால் அந்தரங்க உரிமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளது.