2வது நாளாக மாவட்ட ஆட்சியர் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

83பார்த்தது
எட்டையாபுரத்தில் 2வது நாளாக மாவட்ட ஆட்சியர் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.


தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் தாலுகா உட்பட்ட பகுதிகளில் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற நோக்கத்தில் மக்களின் குறைகளை தீர்க்க " உங்களைத் தேடி உங்கள் ஊரில் " என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக எட்டையாபுரம் பகுதிகளான கண்ண கட்டை கீழஈரால் உள்ளிட்ட பகுதிகளில் மக்களின் குறைகளை கிராமம் கிராமமாக நேரடியாக சென்று கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து எட்டையபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இரவு தங்கி எட்டையாபுரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பால் கொள்முதல் குறித்து கேட்டறிந்து, பாலின் தரத்தினை பரிசோதனை செய்து ஆய்வுகளை மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி