இருசக்கர வாகனம் மீது மோதிய கார் ஒருவர் பலி

2262பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கீழநம்பிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் குமார் வெங்கடேசன், பொன்மாடசாமி இருவரும் இரு சக்கர வாகனத்தில் ஊரிலிருந்து எட்டையாபுரத்திற்கு சென்றுள்ளனர். முத்தலாபுரம் பாலம் அருகே வந்தபோது அப்ப அதில் உள்ள கடையில் வாட்டர் கேன் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளனர்.

அப்போது திண்டுக்கல்லில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற கார் அதிவேகமாக நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதி தூக்கி வீசி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்தில் குமார் வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் எட்டையாபுரம் போலீசார் விரைந்து சென்று உயிரிழந்த குமார் வெங்கடேசன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக எட்டையாபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்த பொன் மாடசாமி சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பொன் மாடசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் திண்டுக்கல் பேகம்பூர் ஜின்னா நகரைச் சேர்ந்த முகமது சுமைலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி