தூத்துக்குடி மாவட்டத்தில் செல்போன்கள் காணாமல் போனதாக உள்ள புகார்களின் பேரில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 11 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்கள் மீட்பு - மீட்கப்பட்ட செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.
அதனை தொடர்ந்து சைபர் குற்றங்கள் குறித்தும், அதிலிருந்து தற்காத்துக் கொள்வது குறித்தும் எடுத்துரைத்து சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு அல்லது cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் செல்போன் தொலைந்து விட்டால் காவல் நிலையத்தில் புகார் அளித்த விவரங்களுடன் CEIR.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறும் சைபர் குற்றப்பிரிவு காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ் உட்பட சைபர் குற்றப் பிரிவு காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்