மது குடித்த ஆம்புலன்ஸ் டிரைவர் சாவு!

84பார்த்தது
மது குடித்த ஆம்புலன்ஸ் டிரைவர் சாவு!
தூத்துக்குடியில் அளவுக்கு அதிகமாக மது குடித்த ஆம்புலன்ஸ் டிரைவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி செல்சினி காலனி முதல் தெருவைச் சேர்ந்தவர் சண்முகவேல் மகன் இளங்கோவன் (32). தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று  திரேஸ்புரத்தில் உள்ள கடை முன்பு அளவுக்கு அதிகமாக மது குடித்து இறந்து கிடந்துள்ளார்.  

இதுகுறித்து தகவல் அறிந்து வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி