காஸா மசூதி மீதான வான்வழி தாக்குதலில் 18 பேர் பலி

52பார்த்தது
காஸா மசூதி மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர். இன்று (அக்., 06) அதிகாலை இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் மத்திய காசாவில் 18 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். மசூதி மீதான தாக்குதல் குறித்து இஸ்ரேலிய ராணுவம் உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை. கடந்த ஓராண்டாக நடந்து வரும் போரில், தற்போது மொத்த பலி எண்ணிக்கை 42,000-ஐ நெருங்குகிறது. இஸ்ரேல் நேற்று லெபனானை தாக்கியிந்தது.

தொடர்புடைய செய்தி