"துணை முதல்வர் உருவத்தில் கலைஞரை பார்க்கிறேன்" - ஆர்.எஸ்.பாரதி

50பார்த்தது
சென்னை ராயபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருவத்தில் தலைவர் கலைஞரை பார்ப்பது போல உள்ளது. கலைஞர் எந்த முடிவையும் சரியாக, உறுதியாக எடுப்பார். ஒரு முடிவை எடுத்த பிறகு எந்த காரணத்திற்காகவும் அதனை மாற்றிக்கொள்ள மாட்டார். அதேபோல, உதயநிதி ஸ்டாலினின் எண்ணமும் இருக்கிறது. அதனை என்னால் பார்க்க முடிகிறது” என்றார்.

நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி