![](https://media.getlokalapp.com/cache/e8/ca/e8ca742e60e0dce15beb970c660a0f1c.webp)
![](https://amp.dev/static/samples/img/play-icon.png)
சமையல் கலைஞர்களுக்கு தனி நல வாரியம் வேண்டும்
சமையல் என்பது தொழில் அல்ல அது ஒரு கலை என்பதை உணர்ந்து அத்தகைய கலைஞர்களது நலனை பாதுகாத்திட அரசு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டுமென இச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மீராமைதீன் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மாநில அளவிலான சமையல் சங்கத்தின் கூட்டம் டெல்டா சமையல் சங்கத்தின் சார்பில் திருவாரூரில் அதன் மாநில பொதுச்செயலாளர் மீராமைதீன், மணிகண்டன் ஆகியோரது தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கன்னியாகுமரி, சேலம், நாமக்கல், காரைக்கால், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை முதலான மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆண், பெண் சமையல் கலைஞர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சமையல் கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மீராமைதீன் எங்கள் தொழில் நெருப்போடு தொடர்புடையது. ஓவ்வொரு சமையல் கலைஞரும் உயிரை பணயம்வைத்து இரவு பகல் பாராமல் அற்பணிப்போடு பணியாற்றிவரும் எங்களுக்கு தமிழக அரசு தனி நல வாரியம் அமைத்து எங்களது குடும்பத்தை பாதுகாத்திட முன்வரவேண்டும் என தெரிவித்தார்.