தோட்டக்கலைப் பயிா் விழிப்புணா்வு பண்ணை சுற்றுலா

54பார்த்தது
தோட்டக்கலைப் பயிா் விழிப்புணா்வு பண்ணை சுற்றுலா
மன்னாா்குடி அருகேயுள்ள மூவாநல்லூா் அரசு தோட்டக்கலை பண்ணையில் அரசுப் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற தோட்டக்கலை பயிா்கள் குறித்த விழிப்புணா்வு பண்ணை சுற்றுலா நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட தோட்டக் கலை துணை இயக்குநா் எஸ். நீதிமாணிக்கம் தலைமை வகித்தாா். குடவாசல் சேங்காலிபுரம் அரசு தொடக்கப் பள்ளி மாணவா்கள் 50 போ் இதில் பங்கேற்றனா். இவா்களுக்கு, வீட்டில் காய்கனி தோட்டம் அமைத்தல், குளித்தட்டு காய்கனி செடிகள் அமைத்தல், இயற்கை தோட்டம் அமைத்தல் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டு, காய்கனிகளில் உள்ள சத்துகள் குறித்து விளக்கப்பட்டது. காய்கனிகள் தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்தி அவை விளையும் முறை, விளையும் இடங்கள், அதன்தன்மை குறித்து தோட்டக்கலை துறை அலுவலா்கள் விளக்கினா்.

தொடர்புடைய செய்தி