நாகை எம். பி. யிடம் எல்ஐசி ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை

72பார்த்தது
நாகை எம். பி. யிடம் எல்ஐசி ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை
நாகப்பட்டினம் தொகுதி மக்களவை உறுப்பினர் செல்வராஜை மன்னார்குடியில் உள்ள இல்லத்தில் காப்பிட்டு கழக ஊழியர் சங்கத்தின் தஞ்சை கோட்ட பொதுச் செயலர் சேதுராமன், முன்னாள் தலைவர் இயேசுதாஸ் மற்றும் சங்க நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் ஆயுள் மட்டும் மருத்துவ காப்பீட்டுத் தொகைக்கு ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும். பழைய வருமான வரி சட்டத்தில் இருந்த 80சி பிரிவிற்கு புதிய வருமான வரி சட்டத்தில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் பொது காப்பீட்டில் உள்ள நான்கு பொதுத்துறை நிறுவனங்களை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்.

தொடர்புடைய செய்தி