காவி உடையில் திருவள்ளுவர் - செல்வப்பெருந்தகை கண்டனம்

65பார்த்தது
காவி உடையில் திருவள்ளுவர் - செல்வப்பெருந்தகை கண்டனம்
திருவள்ளுவர் விழாவிற்கான ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் காவி உடையில் திருவள்ளுவர் படம் இடம்பெற்றுள்ளது. இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “அரசு அங்கீகரித்த புகைப்படத்தை மாற்றி, சாதி, மத, சமயம் சார்ந்து திருவள்ளுவர் புகைப்படத்தை வெளியிடுவது சட்டத்திற்குப் புறம்பானது. சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஆளுநரே இப்படிச் செய்வது கண்டனத்திற்கு உரியது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி