நாய்க்குட்டி இறந்து 2 நாட்களாக துர்நாற்றம் வீசும் அவலம்

57பார்த்தது
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கழிவறையில் உயிரிழந்து இரண்டு நாட்களாக துர்நாற்றம் வீசி வரும் நாய் குட்டி இறந்தது தெரியாமல் மற்ற குட்டிகள் உடன் பரிதவிக்கும் தாய் நாய்.


திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஆவின் பாலகம் பின்புறம் உள்ள வாகன நிறுத்தம் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுகாதார கழிப்பிடம் உள்ளது. இறந்து இரண்டு நாட்கள் ஆன நாய்க்குட்டி ஒன்று துர்நாற்றம் வீசி வருகிறது நாய்க்குட்டி இறந்ததை தெரியாமல் அதன் உடன் பிறந்த மற்ற நாய்க்குட்டிகள் அதை எழுப்ப கத்திக் கதறி கொண்டிருக்கின்றன.
நாய்க்குட்டி இறந்து துர்நாற்றம் வீசி வருவதை ஆட்சியரகத்தில் ஒருவரும் கண்டு கொள்ளவில்லை. குட்டி நாய் இறந்ததைசெய்வதறியாமல் அதன் தாய் மற்ற நான்கு குட்டிகளுடன் அப்பகுதியில் சுற்றி சுற்றி வருவது அனைவரின் மனதையும் வேதனை அடையச் செய்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி