நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு.

59பார்த்தது
தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புரட்சி பாரதம் கட்சிக்கு திருவள்ளுர் அல்லது விழுப்புரம் தொகுதி ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புரட்சி பாரதம் கட்சிக்கு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட தொகுதிகள் ஏதும் ஒதுக்கப்படாததால் புரட்சி பாரதம் கட்சியினர் அதிருப்தி அடைந்தனர். மேலும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பது குறித்து இரண்டு நாட்களில் தெரிவிப்பதாக புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான ஜெகன் மூர்த்தி தெரிவித்திருந்தார் தற்போது தேர்தல் பிரச்சாரம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டத்திலும் புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளாமல் இருந்து வந்த நிலையில் பூந்தமல்லியில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது அதில் அக்கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தி கூறுகையில் தங்களுக்கு நாடாளுமன்ற தொகுதியில் இடம் ஒதுக்காத நிலையில் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ததில் 90 சதவிதம் தொண்டர்கள் அதிமுகவுடன் பயணிக்கலாம் என கூறிய நிலையில் தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகவும் அதிமுகவின் முக்கிய தலைவர்கள் தங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் வாய்ப்பு அளிப்பதாக உறுதியளித்ததின் பேரில் தற்போது ஆதரவு அளித்துள்ளதாகவும்,

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி