+2 மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

3299பார்த்தது
திருமுல்லைவாயில் அருகே மாடியில் செல்போன் பேசிக் கொண்டிருந்த போது அருகில் உள்ள மின்னழுத்த மின்சார கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கியதில் +2 மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை திருமுல்லைவாயில் நாகம்மை நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் ஆட்டோ ஓட்டுனர். இவரது மகன் சந்தோஷம்/17 அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் +2 படித்து வந்தார். தற்போது +2 தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்து வந்த சந்தோஷ் மாடியில் செல்போன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது விட்டு அருகே சென்ற உயர்மின் அழுத்த மின் கம்பியால் ஈர்க்கப்பட்டு, உடல் கருகிய நிலையில் சந்தோஷ் மயங்கி விழுந்துள்ளார்.

இவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 90 சதவீதம் தீக்காயத்துடன் சந்தோஷ் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சந்தோஷ் இன்று உயிரிழந்தார். இது குறித்து திருமுல்லைவாயில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி