சேலம் மாவட்டம் மேட்டூர் பாரதி நகரை சேர்ந்தவர் ராஜமா
ணிக்கம் (28). இவர் மேட்டூர் சின்ன பார்க் அருகே தள்ளுவண்டியில் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவரது கடைக்கு வந்த 3 பேர் அவரிடம் பணம் கேட்டு மிரட்டினர். அவர் பணம் கொடுக்க மறுத்ததால் கடையில் இருந்த கொதிக்கும் எண்ணெய்யை எடுத்து ராஜமாணிக்கம் கையில் ஊற்றினர். இதில் தீக்காயம் அடைந்த அவர் மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ராஜமாணிக்கம் அளித்த புகாரின்பேரில் மேட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் கேட்டு மிரட்டிய நபர்களை தேடி வருகின்றனர்.