கூட்டத்தில் பங்கேற்கா விட்டால் நீக்கப்படுவீர்கள்: மு. அமைச்சர்

54பார்த்தது
திருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட சோழவரம் ஒன்றியம் சின்னம்பேடு, ஊராட்சியில் பூத் கமிட்டி கள ஆய்வு பணி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான விண்ணப்பங்களை வழங்கும் பணி திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி. பலராமன் தலைமையில் கழக செய்தி தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான சி. பொன்னையன் மற்றும் சென்னை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வினோத்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது கட்சி நிர்வாகிகளிடையே கழக செய்தி தொடர்பாளரும் முன்னாள் அமைச்சர்ருமான சி. பொண்ணையன்
கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அனுப்பிய கடிதம் கிடைத்ததா அனைத்து பூத் கமிட்டி நிர்வாகிகளிடம் கேள்வி கேட்ட பொன்னையன் அவர்கள் கிடைக்கவில்லை என்றவுடன் கடிதம் கிடைக்கும் அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியபடி அவரின் கட்டளையை நீங்கள் கடைபிடித்து எடப்பாடி அவர்களை முதல்வராக்க பாடுபட வேண்டும் என்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள்
ஒரு முறை கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றால் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவார்கள் அடுத்த முறை பங்கேற்கவில்லை என்றால் கட்சியிலிருந்தே நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்தார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி