பணியில் மது அருந்திய மின்வாரிய அதிகாரி - வைரல் வீடியோ

4421பார்த்தது
சென்னை திருவொற்றியூர் மின்வாரியத்தில் அலுவலகத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் ஏழுமலை அரசு வாகனத்தில் பணியின் நேரத்தில் போது மது அருந்தியவாறு உள்ளார். அப்போது அங்கு வந்த தனக்கு கீழ் உள்ள பணியாளர் ஒருவர் பயன்படுத்த வேண்டிய அரசு வாகனத்தை வழங்காமல் அதில் மது அருந்தியவாறு ஊழியரிடம் வாகனத்தை விட்டு இறங்குங்கள், இப்பொழுது எங்களுடைய பணி நேரம் என்று கூறியதற்கு உன்னுடைய லோடுமேன் வர சொல்லு நீ என்னிடம் பேசாதே.

மது பாட்டிலுடன் போதையில் பேசியதில் ஊழியர் உங்களிடம் பேசுவதற்கு யாரிடமும் அனுமதி வழங்க வேண்டிய அவசியம் இல்லை. இது எங்களது பணி நேரம் வாகனத்தை விட்டு இறங்குங்கள் என்று கூறியதற்கு தெனாட்டாலாக போதையில் அதிகாரி பேசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பணியின் போது அரசு அதிகாரி மதுபோதையில் அதுவும் அரசு வாகனத்தில் மது அருந்தி கொண்டிருப்பது இதுதான் அரசு ஊழியர்களின் பணியாய் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி