தமிழக- கேரள ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு மறுப்பு

69பார்த்தது
தமிழக- கேரள ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு மறுப்பு
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக தபால் வாக்குப் பதிவு வசதி அறிமுகப்படுத்தப்பட்து. கடந்த 2021 முதல் ரயில்வே தொழிலாளர்கள் மற்றும் அத்தியாவசிய பணியில் உள்ளவர்களுக்கும் இந்த வசதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் 2024 மக்களவைத் தேர்தலையொட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம், கேரளவிலுள்ள ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்குரிமையும் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கு தமிழக, கேரள ரயில்வே ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.