புதுச்சேரியில் ஓடும் பேருந்தில் இருந்து இறங்கிய கல்லூரி மாணவன் அபிஷேக் (19) தவறி விழுந்ததில் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளான். இதுதொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. உயிரிழந்த மாணவனின் உடலை உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிய போக்குவரத்து போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.