கும்மிடிப்பூண்டி அருகே நடு ரோட்டில் ஓட்டுநர் கொலை.

1558பார்த்தது
கும்மிடிப்பூண்டி அடுத்த கோங்கள் கிராம பேருந்து நிலையம் அருகே ஒருவர் தலை முழுவதும் வெட்டப்பட்ட நிலையில் கிடப்பதாக பாதிரிவேடு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற பதிவேடு போலீசார் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர் அதேபோல் மூளை சிதறிய நிலையில் கை கால் தலை உள்ளிட்ட பல இடங்களில் வெட்டப்பட்டு முகம் முழுவதும் சிதைக்கப்பட்ட நிலையில் கிடக்கும் வாலிபர் யார் என்ற விசாரணையில் பதிரிவேடு போலீசார் ஈடுபட்டு வந்தனர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் கும்மிடிப்பூண்டி அடுத்த காயலார்மேடு கிராமத்தை சேர்ந்த திலீப் குமார் என்கிற அருண்குமார் (26) என்பதும், அவர் கடந்த மாதம் மாதர்பாக்கம் அடுத்த மாநெல்லூரைச் சேர்ந்த சக்திவேல் (22) என்ற இளைஞர் வெட்டப்பட்ட வழக்கில் நிபந்தனை ஜாமினில் வெளிவந்தவர் என்பதும் தெரியவந்தது. இதனால் பழிக்குப்பழியாக வாலிபர் அருண்குமார் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இரவு நேரத்தில் அருண்குமாரை வீட்டிலிருந்து அழைத்து வந்த குமார நாயக்கன் பேட்டையைச் சேர்ந்த தாமஸ் என்ற வாலிபரையும் கைது செய்த பாதிரிவேடு போலீசார் கொலை செய்யப்பட்ட இடத்தின் அருகாமையில் சிசிடிவி பதிவுகளை கொண்டும் விசாரணையை தீவிரபடுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி