பாலியல் வழக்கு: கலாஷேத்ரா முன்னாள் நடன பேராசிரியர் கைது

62பார்த்தது
பாலியல் வழக்கு: கலாஷேத்ரா முன்னாள் நடன பேராசிரியர் கைது
சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா நடனக் கல்லூரியில் 15 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவி ஒருவர், தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவர் சென்னை காவல் ஆணையருக்கு சில நாட்களுக்கு முன்பு இமெயில் மூலமாக புகாரளித்தார். அதில் கலாஷேத்ரா பள்ளியில் படித்த போது, நடன பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறியுள்ளார். போலீசார் விசாரணை நடத்தியதில் ஸ்ரீஜித் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அடையாறு காவல்துறை அவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி