ராஜஸ்தான் மாநிலத்தில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த
பிரதமர் மோடி மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, நாட்டின் சொத்துக்களில் முஸ்லிம்களுக்கே முன்னுரிமை கொடுப்பதாக கூறியதாக தவறான தகவலை பேசி இருந்தார். இந்த பேச்சு கடும் சர்ச்சையை கிளப்பியிருந்த நிலையில், எதிர்க்கட்சிகள் மோடிக்கு கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், மோடி மீது அளிக்கப்பட்ட புகார்கள் பரிசீலனில் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.