விவசாயிக்கு கொலை மிரட்டல்

1547பார்த்தது
கும்மிடிப்பூண்டி அருகே வடமதுரை ஊராட்சிக்குட்பட்ட கீழ் மாளிகை பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பாபு இவருக்கு கீழ் மாளிகை பட்டு பகுதியில் ஆரணி ஆற்றின் அருகே சுமார் 4. 5 ஏக்கர் பரப்பளவில் நிலத்தில்
வேர்க்கடலை, நெற்பயிர் போன்றவற்றை விவசாயம் செய்து வருகிறார் இதனிடையே இவரது நிலத்திற்கு அருகாமையில் தனிநபர் ஒருவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் சவுடுமண் குவாரி ஒன்று அரசு அனுமதியோடு இயங்கி வருகிறது. இந்த நிலையில் விவசாயி பாபு என்பவருக்கு சொந்தமான நிலத்தில் சட்டவிரோதமாக தனியார் குவாரி நிர்வாகம் பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தனியார் குவாரி உரிமையாளரிடம் கேட்டபோது உரிய பதிலளிக்காமல் தகாத வார்த்தைகளால் பேசியதோடு அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக விவசாயி பாபு அரசு அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விவசாயி பாபு புகார் அளித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி