மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையினர் கைது செய்ததைக் கண்டித்து பாஜகவுக்கு எதிராகப் போராட்டம் வெடித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பாஜக தலைமையகம் அருகே ஐடிஓவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட அமைச்சர் சௌரப் பரத்வாஜ், அமைச்சர் அதிஷி உள்பட ஆம் ஆத்மி தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.