ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் ஆய்வு

62பார்த்தது
புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சுமார் 9மணி நேரம் தீவிர சோதனை. 1. 11 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல்.

புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் சென்றது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் புழல் பிடிஓ அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெற்ற சோதனையில் கேட்பாரற்று கிடந்த 1. 11 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிஓ அலுவலகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை விசாரணை நடத்தினர். நள்ளிரவு சுமார் 12மணி வரை என சுமார் 9மணி நேரம் நீடித்த சோதனையை முடித்து கொண்டு புறப்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என தெரிவித்தனர். பிடிஓ அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனையால் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி