தாய் கண் முன் பிரிந்த மகன் உயிர் (வீடியோ)

31915பார்த்தது
கோவை சாய்பாபா காலனி கருப்புசாமி வீதி பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவரது மகன் ஆனந்த். சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவருக்கு உயர் ரத்த அழுத்தமும் இருந்துள்ளது. இந்நிலையில் தனது தாய் மற்றும் பாட்டியுடன் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு திரும்ப பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தனர். அப்போது திடீரென துடியலூரில் இருந்து போத்தனூர் நோக்கி சென்ற தனியார் பேருந்தின் சக்கரத்தில் தலை வைத்து ஆனந்த் படுத்துள்ளார். பேருந்து அவர் தலை மீது ஏறியது. இதனால் சம்பவ இடத்திலேயே தனது தாயின் கண் முன்னே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி