வாலிபர் கொலை வழக்கு-7 பேருக்கு காப்பு

76பார்த்தது
வாலிபர் கொலை வழக்கு-7 பேருக்கு காப்பு
சென்னை அடுத்த திருவள்ளூரைச் சேர்ந்தவர் தீனதயாளன், 31. இவர், அம்பத்துார் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 1ம் தேதி இரவு பலத்த காயத்துடன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தகவல் அறிந்த கொரட்டூர் போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில், 7 பேர் கும்பலால் தாக்கப்பட்டது தெரிந்தது. இந்த நிலையில், 5ம் தேதி அவர் உயிரிழந்தார்.

அதன்பின், தனிப்படை போலீசாரின் விசாரணையில், கடந்த 1ம் தேதி இரவு, கொரட்டூர் ஏரிக்கரை அருகே சிலருடன், தீனதயாளன் மது அருந்தியுள்ளார்.

அப்போது, அவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், தீனதயாளனை சரமாரியாக தாக்கி உள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பியவர், நண்பரின் உதவியுடன், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு உயிரிழந்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக, கொரட்டூரைச் சேர்ந்த பிரதீஷ் பீமா, 27, அம்பத்துாரைச் சேர்ந்த மஹா விஷ்ணு, 19, மணிகண்டன், 27, முரளி, 24, யுவராஜ், 23, வேப்பம்பட்டைச் சேர்ந்த கார்த்திக், 23, உத்தமபாளையத்தைச் சேர்ந்த குமார், 22, ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி