திருநெல்வேலி மாவட்டத்தில் தற்பொழுது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த வெயிலில் பணி மேற்கொண்டு வரும் டவுன் போக்குவரத்து காவலர்களுக்கு இன்று (ஏப். 13) டவுன் பிரபல இருட்டுக்கடை அல்வா நிறுவனர் கவிதா சிங் சிறிய மின்விசிறியை பரிசாக வழங்கினார். இதனை பெற்றுக் கொண்ட காவலர்கள் உரிமையாளர் கவிதா சிங்குக்கு தங்களது நன்றி தெரிவித்தனர்.