நெல்லை மாநகர பேட்டையில் முகநூல் நண்பர்கள் குழு சார்பில் இன்று (மார்ச் 12) பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட், தமிழ் ஆசிரியர் சிவசெல்வ மாரிமுத்து உள்ளிட்ட ஆசிரியர்கள் நரிக்குறவர் காலனிக்கு சென்று கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி பள்ளிக்கு அனுப்ப வேண்டுகோள் விடுத்தனர்.