வங்கி ஊழியர் சங்க 26வது மாநாடு

68பார்த்தது
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட வங்கி ஊழியர் சங்க 26வது மாநாடு நெல்லை சந்திப்பு ராஜ் மஹாலில் வைத்து இன்று (செப். 1) நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு வங்கி ஊழியர் சங்க தலைவர் விக்டர் துரைராஜ் தலைமை தாங்கினார். உப தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார். பொதுச்செயலாளர் அருணாச்சலம் துவக்க உரையாற்றினார். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டின் இறுதியாக பொருளாளர் சக்தி வேலாயுதம் நன்றி கூறினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி