பேயிடம் பேசிய மனைவி.. கொடூரமாக கொன்ற கணவர்

9600பார்த்தது
பேயிடம் பேசிய மனைவி.. கொடூரமாக கொன்ற கணவர்
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டம் அருகே லால் என்பவர் தனது மனைவி தேவியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், தனது மனைவி ஆவிகளுடன் தொலைபேசியில் பேசுவதாக சந்தேகமடைந்த லால் நேற்று (ஜூன் 12) அதிகாலையில் கோடரியால் மனைவியை கொடூரமாக வெட்டிக் கொலை செய்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் தேவியின் உடலை மீட்ட நிலையில் கணவரையும் கைது செய்தனர். மேலும், மூட நம்பிக்கை காரணமாக இவ்வாறு கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி