சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர் பலி.. பேரனிடம் தீவிர விசாரணை

22823பார்த்தது
சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர் பலி.. பேரனிடம் தீவிர விசாரணை
நாமக்கல் மாவட்டத்தில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். உணவகத்தில் நேற்று முன்தினம் தங்களது பேரன் வாங்கி வந்த சிக்கன் ரைஸை தாயார் நதியா மற்றும் அவரது தந்தை சண்முகநாதன் (72) ஆகியோர் சாப்பிட்ட நிலையில் இருவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சண்முகநாதன் நேற்று உயிரிழந்தார். மேலும், அவர் சாப்பிட்ட சிக்கன் ரைஸில் பூச்சி மருந்து கலந்திருந்தது தடயவியல் சோதனையில் தெரியவந்துள்ளது.

இதில் திடீர் திருப்புமுனையாக சிக்கன் ரைஸில் ஆர்கனோ பாஸ்பரஸ் என்ற பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பேரன் பகவதி பார்சல் வாங்கி வந்த நிலையில், இது குறித்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி