எழும்பூரில் இருந்து சேலம் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் சத்திரத்திற்கு இடைப்பட்ட பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் மூதாட்டி ஒருவர் படுத்திருப்பதை பார்த்த லோகோ பைலட், 200 மீட்டர் முன்பாகவே ரயிலை நிறுத்தி, ரயில்வே நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே ஊழியர்கள் மூதாட்டியை மீட்டு சேலம் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர் யார்.? மனநலம் பாதிக்கப்பட்டவரா.? தற்கொலைக்கு முயன்றாரா.? என்ற கோணத்தில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.