முதலைகள் இருக்கும் ஆற்றில் மகனை தள்ளி கொன்ற தாய்

19420பார்த்தது
முதலைகள் இருக்கும் ஆற்றில் மகனை தள்ளி கொன்ற தாய்
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ரவிக்குமார் (36) - சாவித்திரி (32) தம்பதி. இவர்களுக்கு 6 வயதில் வினோத் என்ற மகன் உள்ளார். வினோத்துக்கு பிறவியில் இருந்தே செவித்திறன் குறைபாடு இருந்துள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு முதலைகள் இருக்கும் கால்வாயில் தனது மகனை சாவித்திரி வீசியுள்ளார். தகவலறிந்த போலீசார் மறுநாள் சிறுவனின் உடலை வலது கை இல்லாமலும் காயங்களுடனும் கண்டுபிடித்தனர். பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்ட சாவித்திரி, தனது கணவர் தான் இதற்கு காரணம் அவர் கொடுத்த மனஅழுத்ததில் தான் இப்படி செய்தேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி