ஐந்தாம் கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவு.. நாளை வாக்குப்பதிவு!

63பார்த்தது
ஐந்தாம் கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவு.. நாளை வாக்குப்பதிவு!
ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று(மே 18) சனிக்கிழமை மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 695 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.

தொடர்புடைய செய்தி