உத்திரபிரதேசம் பதோஹியில் வசிக்கும் பானு பிரகாஷுக்கும் இதே போன்ற சம்பவம் நடந்தது. பானுவின் கணக்கில் ரூ.9,900 கோடி வரவு வைக்கப்பட்டிருப்பது அவருக்கு தெரிய வந்தது. இதையடுத்து வங்கி நிர்வாகத்திடம் புகார் அளித்த நிலையில், மென்பொருள் கோளாறால் இவ்வாறு நடந்தது என தெரியவந்தது. குறிப்பிட்ட வங்கி மென்பொருளில் ஏற்பட்ட பிழை காரணமாக இது நடந்தது என்பது பின்னர் தெரியவந்தது. பின்னர் சிக்கலை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.