ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

81பார்த்தது
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெறும் இன்டர்லாக் சிக்னல் பணிகள் காரணமாக வரும் 23. 07. 2024 முதல் 17. 08. 2024 வரை பல்வேறு சென்னை ரயில்கள் முழுவதும் ரத்து(Fully Cancelled) பாதி ரத்து(Partially Cancelled) மற்றும் வேறு வழியாக திருப்பிவிடப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதில் அருப்புக்கோட்டை வழியாக இயக்கப்படும் வண்டி எண் 20683 / 20684 தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம் அதிவிரைவு ரயில் வருகின்ற 23. 07. 2024 முதல் 11. 08. 2024 வரை விழுப்புரம் வரை மட்டுமே இயங்கும்.

அதே போல் மறுமார்கத்திலும் தாம்பரத்திற்கு பதிலாக விழுப்புரத்திலிருந்து இயக்கப்படும். இதே போல் வைகை அதிவிரைவு ரயில் மற்றும் பல்லவன் அதிவிரைவு ரயில் செங்கல்பட்டு வரை மட்டுமே இருமார்கத்திலும் இயங்கும்.

பல ரயில்கள் தாமதமாக இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் 23. 07. 2024 முதல் 17. 08. 2024 சென்னைக்கு ரயில் பயணம் மேற்கொள்பவர் முன்கூட்டியே தங்கள் பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புடைய செய்தி