திருக்காட்டுப்பள்ளி திரௌபதி அம்மன் கோவில் தீமிதி விழா

57பார்த்தது
திருக்காட்டுப்பள்ளி கண்டியூர் சாலையில் திரௌபதி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் தீமிதி விழா நடத்த விழா குழுவினர் முடிவு செய்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. நேற்று மாலை பக்தர்கள் காவடி எடுத்தும், பால் குடத்துடனும் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை பூர்த்தி செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி