போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிறுத்தப்படும் லாரிகள்

69பார்த்தது
போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிறுத்தப்படும் லாரிகள்
தஞ்சாவூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் தினமும் சரக்கு ரயில் மூலம் அரிசி மூட்டைகள் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

அருகில் உள்ள நெல் சேமிப்பு கிடங்குகளில் இருந்து அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றி ரயில் நிலையம் கொண்டு வரப்படுகிறது.
இந்த நிலையில் தஞ்சாவூர் மேம்பாலம் அருகில் உள்ள சேமிப்பு கிடங்கில் இருந்து அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வரும் லாரிகள் தஞ்சை தெற்கு காவல் நிலையம் அருகே சாலையில் நிறுத்தப்படுவதால் அந்த வழியில் போக்குவரத்து பாதிப்பு அதிக அளவில் ஏற்படுகிறது. அந்த பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான பேருந்துகள், கார்கள், ஆம்புலன்ஸ்கள் சென்று வருகிறது. எனவே அந்த வழியில் செல்பவர்கள் மிகுந்த பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே லாரிகள் நிறுத்துவதற்கு வேறு இடம் ஏற்பாடு செய்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி