திருக்கானூர்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

85பார்த்தது
திருக்கானூர்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
தஞ்சை அருகே திருக்கானூர்பட்டி ரஹ்மத் நகரை சேர்ந்தவர் பாலகுரு (73). இவர் கடந்த 20 ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு தேவாரம் நகரில் உள்ள தனது மருமகன் வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று காலை தனது வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ. 15 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்து பாலகுரு வல்லம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி