பாபநாசத்தில் அமைச்சர் கோவி செழியனுக்கு வரவேற்பு

84பார்த்தது
பாபநாசத்தில் புதிதாக பதவியேற்ற அமைச்சர் கோவி. செழியன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்று பாபநாசத்திற்கு வருகை தந்த அமைச்சர் கோவி. செழியனுக்கு பாபநாசம் அம்மாபேட்டை ஒன்றிய பேரூர் திமுக சார்பில்
தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் எஸ். கல்யாணசுந்தரம் தலைமையில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அமைச்சர் கோவி செழியன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் கோவி அய்யராசு, துரை முருகன், ஒன்றிய செயலாளர்கள் தாமரைச்செல்வன், நாசர், தியாக சுரேஷ், பி. எஸ். குமார், ஒன்றிய பெருந்தலைவர்கள் கே. வீ. கலைச்செல்வன், சுமதி கண்ணதாசன். பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன், நகர செயலாளர்கள் கபிலன், துளசிஅய்யா, சீனு பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் நேர்முக உதவியாளர் முகமது ரிபாயி மற்றும் ஒன்றிய, நகர கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி