பாபனத்தில் சிபிஐஎம்எல் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

72பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அண்ணா சிலை அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்பில் பாலஸ்தீன மக்கள் மீது இனபடுகொலை நடத்தி வரும் இஸ்ரேல் மற்றும் அதற்கு துணை போகும் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய சக்திகளை கண்டித்தும், போரை உடனே நிறுத்த கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பாபநாசம் ஒன்றிய செயலாளர் செல்லதுரை தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கண்ணையன், மாநில குழு உறுப்பினர்கள் மாசிலாமணி, தவச்செல்வன், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாவட்ட செயலாளர் விஜயாள், நகர செயலாளர் கணேசன், மாவட்ட குழு உறுப்பினர்கள் பிரபு, ரமேஷ், அகில இந்திய மாணவர் கழகம் மாவட்ட செயலாளர் செங்கதிர் செல்வன், புரட்சிகர இளைஞர் கழகம் மாவட்ட செயலாளர் செந்தமிழ் செல்வன், மகளிர் அணி பொறுப்பாளர்கள் ஜெசிந்தா, செந்தாமரை, பவானி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி