பாபநாசத்தில் வட்டார நகர காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை

76பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டார நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு பாதயாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து கும்பகோணம் மாநகர மேயர் சரவணன் முன்னிலை வகித்தார் பாபநாசம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பாதயாத்திரை புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக பாபநாசம் பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலையை வந்து அடைந்தது இந்நிகழ்ச்சியில் பாபநாசம் நகரத் தலைவர் பாலாஜி வரவேற்று பேசினார் பாபநாசம் தெற்கு வட்டாரத் தலைவர் தமிழ்ச்செல்வன் பாபநாசம் வடக்கு வட்டாரத் தலைவர் நாகேந்திரன் அய்யம்பேட்டை நகர தலைவர் பஷீர் அஹமது மாவட்ட செய்தி தொடர்பாளர் சரவணன் அம்மாபேட்டை வடக்கு வட்டார தலைவர் கண்ணன் அம்மாபேட்டை தெற்கு வட்டார தலைவர் திருஞானசம்பந்தம் மெலட்டூர் நகர தலைவர் செந்தில்குமார் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் செந்தில்நாதன் கிராம கமிட்டி தலைவர் தமிழரசன் நிர்வாகிகள் கலைவாணன் வக்கீல் சரவணன் ஜெகத்ரட்சகன் துரை சர்மா சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி