புதிய மின்மாற்றி குடந்தை எம்எல்ஏ அன்பழகன் துவக்கி வைத்தார்

57பார்த்தது
கும்பகோணம் அருகே மருதாநல்லூர் ஊராட்சி, கிரீன் வூட்ஸ் நகரில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ரூபாய் 8 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பீட்டில், புதிதாக அமைக்கப்பட்ட 63 கிலோ வாட் மின்திறன் கொண்ட மின்மாற்றியை, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் அவர்கள், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு, தொடங்கி வைத்தார்கள். நிகழ்வில், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவரும், மத்திய ஒன்றிய திமுக செயலாளருமான தி. கணேசன் அவர்கள், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெ. சுதாகர் அவர்கள், மாவட்ட பிரதிநிதி டி. என். கரிகாலன் அவர்கள், மருதாநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் கே. ரவி அவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர் சுதா ராஜேந்திரன் அவர்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் ராஜலெட்சுமி சேகர் அவர்கள், தீபா சக்திவேல் அவர்கள், கும்பகோணம் தெற்கு உதவி செயற்பொறியாளர் கே. சங்கர் அவர்கள், திப்பிராஜபுரம் உதவி மின் பொறியாளர் டி. அசோக் அவர்கள், வார்டு உறுப்பினர்கள் கலியமூர்த்தி அவர்கள், செல்வகுமார் அவர்கள், வாசுதேவன் அவர்கள், திமுக நிர்வாகிகள் ஜெயபால் அவர்கள், முருகேசன் அவர்கள், சேதுராமன் அவர்கள், எம். ஆர். ராஜா அவர்கள், கலியமூர்த்தி அவர்கள், வீரமணி அவர்கள், சித்ரா ராஜ்குமார் அவர்கள், மதியரசன் அவர்கள், கிரீன் வூட்ஸ் நகர் நலச் சங்கத் தலைவர் ஆனந்த் உள்ளிட்ட நகர் நல சங்க நிர்வாகிகள் மற்றும் திமுக இளைஞர் அணியினர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி