பாபநாசம் காவல் நிலையம் முற்றுகை போராட்டம்-சிபிஐ கட்சி

60பார்த்தது
பாபநாசம் காவல் நிலையம் முற்றுகை போராட்டம்-சிபிஐ கட்சி
பாபநாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு கூட்டம்
ஒன்றிய செயலாளர் பொன். சேகர் தலைமையில்
நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் மு. அ. பாரதி, மாவட்ட துணைச் செயலாளர் ஆர். செந்தில்குமார், ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் ஆர். தில்லைவனம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சாமு. தர்மராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க. மாரிமுத்து  தலைமையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட குழு சார்பில் எதிர்வரும் 26. 06. 2024 (புதன்) அன்று காலை 10 மணிக்கு பாபநாசம் அண்ணா சிலையிலிருந்து பேரணி புறப்பட்டு பாபநாசம் காவல் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்ன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி