சங்கரன்கோவிலில் போலீஸ் வெட்டி கொலை - ஒருவர் கைது

1909பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியதுரை(30). இவர் கோவையில் உள்ள மாவட்ட போலீஸ் காவல் ரிப்போர்ட்டராக (POLICE SHORT HAND REPORTER)பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று முன்தினம் அதிகாலை சொந்த ஊருக்கு வந்த நிலையில் உறவினர்களால் காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்ற பெரியதுரையை வெட்டி படுகொலை செய்துவிட்ட நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.

அவ்வழியாக சென்ற நபர்கள் பெரியதுரை இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை அறிந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற சின்ன கோவிலாங்குளம் காவல்துறையினர் பெரியதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த பெரியதுதுரையின் உடலைக் கண்டு அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். விடுமுறை நாளுக்கு சொந்த ஊர் வந்த இடத்தில் மாவட்ட போலீஸ் நிருபர் பெரியதுரையை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் அல்லித்துரை என்பவரை கைது செய்து விசாரணை செய்தபோது கொலையில் ஈடுபட்டது தெரிய வந்தது. தன் மனைவியிடம் செல்போனில் தகாத முறையில் பேசியதால் கொலை செய்ததாக அல்லித்துரை கூறினார். இச்சம்பவத்தில் மேலும் ஒருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி