Revenge Quitting என்ற புதுவித ட்ரெண்ட் 2025 ஜனவரி 1-லிருந்து தனியார் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. அதாவது நிறுவனத்தைப் பழிவாங்க அதிரடியாய் 'பேப்பர் போடுவது' என்ற ‘பழிவாங்கல் வேலைத்துறப்பு' தான் அது. இப்படிப் பழிவாங்கும் நோக்கத்தில் டக்கென வேலையை விடுவதற்கான காரணங்கள் என்ன என்பதை மனிதவள மேம்பாட்டு வல்லுநர்கள் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்கள்.