காலி பாட்டில்களை திரும்பப் பெறும் டெண்டர்: எடப்பாடி கண்டனம்

81பார்த்தது
காலி பாட்டில்களை திரும்பப் பெறும் டெண்டர்: எடப்பாடி கண்டனம்
உயர்நீதிமன்ற ஆணைப்படி, காலி பாட்டில்களை திரும்பப் பெறும் டெண்டரை கடந்த 3 ஆண்டுகளாக கோராமல் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தி வரும் முதலமைச்சருக்கு கடும் கண்டனம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது அறிக்கையில், உடனடியாக காலி பாட்டில்களை திரும்பப்பெறும் டெண்டரை விட்டு, சட்ட விதிகளின்படி அதிக விலை கோரியவர்களுக்கு முறைப்படி ஒப்பந்தம் விட்டு, அரசின் வருவாயை அதிகரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி