பள்ளியில் முதலிடம் பிடிக்காததால் மாணவி தற்கொலை

67பார்த்தது
பள்ளியில் முதலிடம் பிடிக்காததால் மாணவி தற்கொலை
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில், பள்ளி அளவில் முதலிடம் பிடிக்காததால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். சமீபத்தில் வெளியான தேர்வு முடிவுகளில், பாண்டேபூரைச் சேர்ந்த சாக்ஷி 600க்கு 572 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பள்ளி முதலிடம் பிடித்த மற்றொரு மாணவி 575 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தான் டாப்பர் ஆகாததால் மனமுடைந்த சாக்ஷி திங்கள்கிழமை(மே 6) இரவு 9 மணியளவில் வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி