திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு அண்மையில் அரசுப் பேருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. பேருந்தில் நடத்துனராக மூவேந்திரன் என்பவர் இருந்தார். அப்போது வள்ளியூரில் இறங்க முயன்ற பயணிகளிடம் அங்கெல்லாம் பேருந்து நிற்காது என்று கூறியதுடன் பல பயணிகளிடம் மரியாதை இல்லாமல் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது, இது குறித்த விசாரணையில் அவர் மீது தவறு இருப்பது உறுதியானதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.